அடிக்கடி மின்வெட்டு.. நேற்றிரவு முதல் மின்சப்ளை நிறுத்தம்? கொந்தளித்த பொதுமக்கள்.. திடீர் சாலைமறியல்!
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு புது நகரில் தொடர்ந்து ஒரு வார காலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதும் இரவினில் மின்சாரம் துண்டிக்கப்படுவதும் என தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
மேலும் மின்சாரம் உற்பத்தி செய்யும் பகுதியான வடசென்னை அனல் மின் நிலையம் பகுதியில் அத்திப்பட்டு புதுநகர் கிராமம் அமைந்துள்ளதால் அப்பகுதியிலேயே மின்சாரம் துண்டிக்கப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் அந்த கிராம மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வடசென்னை அனல் மின் நிலையம்,காமராஜர் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகங்களுக்கு செல்லும் வாகனங்களும் எண்ணூர் பகுதிக்கு செல்லும் வாகனங்களும் மறுபக்கம் மீஞ்சூர் திருவெற்றியூர் பொன்னேரிக்கு செல்லும் வாகனங்களும் வரிசையாக நின்றுள்ளன. இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உயிரிழந்த ஜெயக்குமார் வாயில் இருந்து கிடைத்த தடயம்.. காட்டிக் கொடுத்த மாட்டு கொட்டகை : அடுத்தடுத்து பரபரப்பு!
அரசு துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.