புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சாமிநாதன், புதுச்சேரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஜி மற்றும் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட விரும்புவதாக தெரிவித்ததாகவும் மேலும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அதிகப்படியான இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த போது பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டதாகவும் அதேபோல் சட்டமன்ற கூட்டணி வேறு, உள்ளாட்சி தேர்தல் வேறு என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும் 5 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார். (என்.ஆர்.காங்கிரஸ், பாஜக). உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து தேசிய தலைமையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனித்து போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.