திருச்சி : பெண் சகவாசத்தால் வேன் ஓட்டுநர் வீட்டு வாசலில் குத்தி கொலை செய்த சக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் கக்கன் காலனி சேர்ந்த அசோகன் மகன் சக்திகுமார் (வயது 34) இவர் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இதே போல் திருவெறும்பூர் காமராஜர் நகர், சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துப்பாண்டி (வயது 32) இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே பெண் தொடர்பான தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துப்பாண்டி சக்திகுமாரின் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த முத்துபாண்டி தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சக்திகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சக்திகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முத்துபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.