Categories: தமிழகம்

ஓரினச்சேர்க்கைக்கு அடிமை.. GAY ஆப் மூலம் கிடைத்த நட்பு.. நம்பிச் சென்ற அரசு ஊழியருக்கு நடுக்காட்டில் ஷாக்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஒருவர் குலசேகரம் ரப்பர் கழகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் இவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழி அருகில் நான்கு வழி சாலைக்கு அழைத்து சென்றார்.

அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது மேலும் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் அரசு ஊழியர் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், பவுள மோதிரம் மற்றும் ரூ.32,000 ஆகியவற்றை பறித்தனர்.

பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து அரசு ஊழியர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதனபேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஆபாச செயலி மூலம் நபர்களை வரவழைத்து பணம் பறிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அரசு ஊழியரிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது.களக்காட்டை சேர்ந்த சரவணன் (வயது 31) என்பது தெரியவந்தது.

அரசு ஊழியரை ஓரினச்சேர்க்கைக்கு செயலி மூலம் தொடர்பு கொண்டு அழைத்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தார், அதனை தொடர்ந்து போலீசார் சரவணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சரவணன் மீது ஏற்கனவே இதுபோல் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. சரவணனுடன் சேர்த்து அரசு ஊழியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிவா, மணி என்பதும் தெரிய வந்துள்ளது.

போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சரவணனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த ஆபாச செயலில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது இது குறித்து சைபர்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.