Categories: தமிழகம்

என்னை நம்பியவர்களுக்கு என் தற்கொலை மூலமாக தீர்வு கிடைக்கும் : உருக்கமான கடிதம் எழுதி வைத்து IFS நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை!!

வேலூர் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன் இந்திரா தம்பதியரின் மகன் வினோத்குமார் (28). இவர் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக இருந்து வருகிறார்.

இவர் தனது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 30க்கும் அதிகமான நபர்களிடமிருந்து 50 லட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்து இருக்கிறார்.

தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டி பணம் கிடைக்கவில்லை.

நேற்று முன்தினம் ifs நிதி நிறுவன அலுவலகம் மற்றும் ஏஜென்ட்கள் வீடுகளில் சோதனை நடந்த நிலையில், இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜென்ட் வினோத்குமாரிடம் தொடர்ந்து கேட்டுள்ளனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் நேற்று இரவு வீட்டில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத விரக்தியில் வினோத்குமார் தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

போலீசார் வினோத்குமார் எழுதி வைத்த கடிதத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். அந்த கடிதத்தில் நிதி நிறுவன இயக்குனர்கள் லட்சுமி நாராயணன் ,ஜனார்த்தனன் மற்றும் மோகன் பாபு, சுந்தரம் ஆகியோர் இயக்கும் நிறுவனத்தில் பணம் செலுத்தியதாகவும், காவல்துறை அவர்களை கண்டுபிடித்து என் மூலம் பணம் செலுத்திய இவர்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்னை நம்பியவர்களுக்கு என் முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். நான் முதலீடு செய்த பணத்திற்கு அனைத்து ஆவணங்களும் என்னுடைய இன்டர்நெட் பேங்கில் உள்ளது. முதலீடு செய்தவர்கள் நிறுவனத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் மன்னித்துக் கொள்ளுங்கள் என அந்த கடிதத்தில் உள்ளது.

மேலும், வினோத்குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

முதலீட்டாளர்கள் தற்கொலை போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதும், ஏற்கனவே நிதி நிறுவன இயக்குனர் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

6 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

7 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

8 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

8 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

9 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

10 hours ago

This website uses cookies.