சென்னை காசிமேடு திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டு வருகிறது
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வீடுகளில் பூஜை செய்த விநாயகரை குடும்பம் குடும்பமாக வந்து கடலில் கரைத்தனர் கடற்கரை பகுதியில் ஏராள மக்கள் கூட்டம்
காசிமேடு முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை கடற்கரை பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு விநாயகர் சிலைகளை கொண்டு வந்து கரைக்கின்றனர். இதில் எண்ணூர் தாழங்குப்பத்தில் 24 சிலைகளும், எண்ணூர் பகுதியில் 60 சிலைகளும், பாப்புலர் எடைமேடையில் 21 சிலைகளும், காசிமேட்டில் 157 சிலைகளும் மொத்தம் 262 சிலைகளும் கரைக்கப்பட்டு வருகிறது.
இது மட்டும் அல்லாமல் பூக்கடை வண்ணாரப்பேட்டை மற்றும் புலியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வைக்கப்பட்ட அனைத்து சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காசிமேடு கடற்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டு வருகிறது.
இந்த சிலைகள் அனைத்தும் திருவெற்றியூர் எண்ணூர் மற்றும் ஆர் கே நகர் தண்டையார்பேட்டை மற்றும் காசிமேடு பகுதிக்கு உட்பட்ட சிலைகள், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காலகட்டத்தினால் விநாயகர் சதுர்த்தி விழா மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்படாத நிலையில், இந்த வருடம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மதியம் முதல் பெரிய சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாகவும் மற்றும் ஆரவாரத்துடன் மேளதாள உடன் உற்சாகத்துடன் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வருகின்றன கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை கிரேன் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் சிலைகளை கரைக்கின்றனர்
இதனால், கடற்கரை பகுதி மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், விநாயகரை கடலில் கரைத்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி செல்கின்றனர்.
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.