விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஒவ்வொரு சிலையின் நகர்வையும் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்க ஏற்பாடு ஊர்வலத்தில் பிரச்சனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 976 விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக சென்று கரைக்கப்பட உள்ள நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ஊர்வலத்தில் பிரச்சனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் 1500 காவலர்கள், 221 பயிற்சி காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 45 இடங்களில் 170 சிசிடிவி கேமிரா, 4 டிரோன்கள், 10 வீடியோ கேமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
அதேபோன்று வேலூர் நகரத்தில் உள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் ஜி.பிஸ்.எஸ் மூலம், ஜியோ கூகுள் மேப் டிராகிங் மூலமாகவும் சிலையின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்ட 60 நபர்களையும் கைது செய்து இருக்கிறார்கள்.
சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரியில் முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வேலூர் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.