திண்டுக்கல் ; கொடைரோடு அருகே போதையில ரகளை – 3 போதை ஆசாமிகள் ஒரு போதை ஆசாமியை பிளந்து கட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது வருகிறது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொடைரோடு மெயின் ரோட்டில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கொடைரோடு அருகே விளாம்பட்டி சிவா (27), மாயி (23), முகேஷ் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து நேற்று இரவு மது அருந்திக் கொண்டிருந்தனர். மதுபோதை தலைக்கு ஏறிய நிலையில், எங்களது செல்போனை காணவில்லை என மதுக்கடையில் இருந்து அனைவரையும் தகாத வார்த்தையில் திட்டி உள்ளனர்.
அப்போது, மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்த கொடைரோட்டை சேர்ந்த ராஜூ தட்டி கேட்டுள்ளார். இதனால். கோபமடைந்த 3 பேரும் சேர்ந்து ராஜூ கடிமையாக தாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து, மது கடை பணியாளர்கள் அம்மையநாயக்கனூர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை கடையை விட்டு வெளியே போகக் கூறியும், அதை மறுத்து மீண்டும் போலீசார் முன்னிலையில் ராஜூவை கடுமையாக தாக்கி தலையில் காயத்தை ஏற்படுத்தினர். 3 பேரையும் கைது செய்த அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை அங்குள்ள ஒருவர் தான் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், புதிய கார், பைக் வாங்கவததை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிர்கர்களிடம் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர். இதையும் படியுங்க:…
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
This website uses cookies.