Categories: தமிழகம்

கோவையில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெங்களூருவில் சிக்கிய கும்பல் : 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது!!

கோவை : மூதாட்டியை குறிவைத்து பிளாஸ்திரி சுற்றி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த ம் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

சூலூரில் மூதாட்டியை பிளாஸ்டிரியால் சுற்றி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்களை போன்று நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த இளம் திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஒரே வாரத்தில் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்ற 82 வயது மூதாட்டியை கடந்த ஒரு வாரத்திற்கு முன் நான்கு பவுன் நகை கொள்ளை அடிப்பதற்காக வாய், கை, கால்களில் பிளாஸ்திரி சுற்றி மர்மநபர்கள் கொன்று கொள்ளையடித்து சென்றனர்.

இதில் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சூலூர் காவல்துறையிடம் தெரிவித்து நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

மூதாட்டியின் வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவி ஒன்றில் இளைஞர்கள் நடந்து சென்றது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தொடர்ந்து 200 சிசிடிவிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இளைஞர்கள் என்பதும் அவர்கள் பெங்களூருக்கு தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.

உடனடியாக பெங்களூர் விரைந்த காவல்துறையினர் அங்கே பதுங்கி இருந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அபினேஷ், வசந்த் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை இவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவிலில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து மூவரிடம் விசாரணை நடத்தியதில் மூதாட்டியை நகைக்காக வாய் கை கால்களில் பிளாஸ்திரியை சுற்றி கொலை செய்து கொள்ளையடித்து சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா என அந்த மாவட்ட காவல்துறையினரும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டியை கொலை செய்து விட்டு சென்ற இளைஞர்களை ஒரே வாரத்தில் சிசிடிவி உதவியால் கைது செய்திருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டிக்கொண்டிருப்பது இபிஎஸ்தான் : அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்…

4 minutes ago

இப்படி ஒரு படமா?  கண்கலங்கிய ஆமிர்கான்! நெகிழ்ச்சியில் விஷ்ணு விஷால்?

பெயர் சூட்டிய ஆமிர்கான் தமிழின் மிக பிரபலமான நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் “வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படத்தின்…

14 minutes ago

காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல இதயமும் கெட்டுவிட்டது… சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் ஆவேசம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து…

40 minutes ago

மாட்டுக்கறி சாப்புட்டு இராமரா நடிக்கலாமா? சர்ச்சைக்குள் சிக்கிய ரன்பீர் கபூர்! சின்மயியின் தரமான பதிலடி!

இராமராக ரன்பீர் கபூர்? ரன்பீர் கபூர் இராமராகவும் சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வரும் திரைப்படம் “இராமாயணா”. பிரம்மாண்ட பொருட்செலவில்…

2 hours ago

ஒட்டுத்துணியில்லாமல் கிடந்த இளம்பெண்… அதிகாலையில் ஷாக் : பரபரப்பு சம்பவம்!

வேலூர் மாவட்டத்தில் 23 வயது இளம்பெண் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 6 மாதத்திற்கு பின்னர் வேலையை ராஜினாமா…

2 hours ago

LGBTQIA குறித்து சர்ச்சை கருத்து… வருத்தம் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்..!!

LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…

3 hours ago

This website uses cookies.