Categories: தமிழகம்

கோவையில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெங்களூருவில் சிக்கிய கும்பல் : 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது!!

கோவை : மூதாட்டியை குறிவைத்து பிளாஸ்திரி சுற்றி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த ம் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

சூலூரில் மூதாட்டியை பிளாஸ்டிரியால் சுற்றி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்களை போன்று நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த இளம் திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஒரே வாரத்தில் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்ற 82 வயது மூதாட்டியை கடந்த ஒரு வாரத்திற்கு முன் நான்கு பவுன் நகை கொள்ளை அடிப்பதற்காக வாய், கை, கால்களில் பிளாஸ்திரி சுற்றி மர்மநபர்கள் கொன்று கொள்ளையடித்து சென்றனர்.

இதில் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சூலூர் காவல்துறையிடம் தெரிவித்து நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

மூதாட்டியின் வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவி ஒன்றில் இளைஞர்கள் நடந்து சென்றது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தொடர்ந்து 200 சிசிடிவிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இளைஞர்கள் என்பதும் அவர்கள் பெங்களூருக்கு தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.

உடனடியாக பெங்களூர் விரைந்த காவல்துறையினர் அங்கே பதுங்கி இருந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அபினேஷ், வசந்த் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை இவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவிலில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து மூவரிடம் விசாரணை நடத்தியதில் மூதாட்டியை நகைக்காக வாய் கை கால்களில் பிளாஸ்திரியை சுற்றி கொலை செய்து கொள்ளையடித்து சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா என அந்த மாவட்ட காவல்துறையினரும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டியை கொலை செய்து விட்டு சென்ற இளைஞர்களை ஒரே வாரத்தில் சிசிடிவி உதவியால் கைது செய்திருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

2 days ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.