திண்டுக்கல் : சலூன் கடையில் முடி வெட்ட வந்த நபரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் சவேரியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்து விட்டு இன்று மாலை வீடு திரும்பினார்.
வீட்டில் சலூன் கடைக்கு செல்வதாக தெரிவித்து விட்டு பேகம்பூர் பகுதியில் உள்ள பிரின்ஸ் சலூன் கடையில் முடி வெட்டுவதற்காக கடையின் உள்ளே நுழைந்தபோது அருண்குமாரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கூர்மையான கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில் அருண்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை பார்த்த கடை உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அருண்குமாரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அருண்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முன்விரோதம் காரணமாக இந்த செயல் நடந்து உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திண்டுக்கல் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.