புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் 3 பேர் கொண்ட கும்பல் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியின் காலாப்பட்டில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பல்கலைக்கழக விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு இளநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறார். மேலும், இந்த மாணவி அதே கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், இருவரும் கல்லூரி வளாகத்தில் வேதியியல் பிரிவுக் கட்டிடத்தின் பின்புறம் தனியாக பேசிக் கொண்டிருந்து உள்ளனர். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், இருவரிடமும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
எனவே, இதனை தட்டிக்கேட்ட மாணவரை, அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த மாணவியை 3 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற மாணவி கீழே விழுந்துள்ளார்.
தொடர்ந்து, கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்து போன அக்கும்பல், மாணவியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனையடுத்து, காயம் அடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு, பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பி உள்ளார்.
இதையும் படிங்க: இதுக்கு ஒரு முடிவே இல்லையா.. தொடர்ந்து உயரும் தங்கம் விலை!
மேலும், இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவி புகார் அளித்துள்ளார். அதேநேரம், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவர்களில் ஒருவர், பல்கலையின் தற்காலிக ஊழியர் என்பது, மற்ற இருவரில் ஒருவர் காலாப்பட்டு பகுதியையும், ஒருவர் வில்லியனூர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
எனவே, இதுகுறித்து போலீசார் உடனடியாக விசாரணை, நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம் சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.