தமிழகம்

மலை உச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. புகாரளிக்காமலே சுட்டுப் பிடித்த போலீசார்.. கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்து, பாலியல் தொல்லை அளித்த இருவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள மலைக்கு, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் சென்றுள்ளனர். அவர்கள் மலையின் உச்சிக்குச் சென்றபோது, அங்கு 4 இளைஞர்கள் மது போதையில் அமர்ந்திருந்துள்ளனர்.

இவ்வாறு மலை உச்சிக்கு தனியாக வந்த இருவரையும் கத்தி முனையில் மிரட்டிய அக்கும்பல், அந்தப் பெண்ணிடம் இருந்து தங்க நகைகளையும், பணத்தையும் பறித்துள்ளனர். பின்னர், அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவர், அந்தப் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணும், ஆணும் அழுதுகொண்டே மலையில் இருந்து இறங்கிவந்து, மலையடிவாரத்தில் இருந்த சிலரிடம் தங்களுக்கு நேர்ந்த்தைச் சொல்லிவிட்டு, போலீசில் புகார் அளிக்கமல் சென்றுவிட்டனர். இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை, தனிப்படை அமைத்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது, கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) என்பதும், அந்தப் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ் (22) மற்றும் நாராயணன் (21) ஆகியோர் என்பம் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, கலையரசன், அபிஷேக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுக்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: மொட்டை கடிதம்.. கம்ப்யூட்டர் லேபில் அரங்கேறிய கொடூரம்.. அரசுப் பள்ளி ஆசிரியர் சிக்கியது எப்படி?

இதனைத் தொடர்ந்து, டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு, எஸ்ஐ பிரபாகர் மற்றும் காவலர்கள் குமார், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்ற நிலையில், சுரேஷ், நாராயணன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது, அவர்களில் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மற்றொருவருக்கு காலில் எலும்பு முறிந்தது.

தொடர்ந்து, துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிவு ஏற்பட்ட நாராயணன் ஆகியோரையும் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.