திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் பல்லடம் பெரும்பாளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது குழந்தைகள் பள்ளி செல்ல வசதியாக இருக்க வேண்டும் என புளியம்பட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டினை விட்டு வெளியேறி பல்லடம் நகர் பகுதியான வடுகம்பாளையம் பகுதியில் தனது மனைவி நந்தனா தேவி மற்றும் குழந்தை சிவானியுடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குடியேறினார்.
இந்நிலையில் அவ்வப்போது தனது கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை புளியம்பட்டி மில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு சென்ற கோபால கிருஷ்ணன் தோட்ட பராமரிப்பு வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் இன்று காலை வழக்கம் போல தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 சவரன் நகை மற்றும் 7500 ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து கோபாலகிருஷ்ணன் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களின் தரவுகள் அடங்கிய harddisk ஐ திருடர்கள் கழட்டி சென்றுள்ளனர்.
மேலும் யாரும் இல்லாத தோட்டத்து வீட்டில் மர்ம நபர்கள் 16 சவரன் நகை மற்றும் 7500 ரொக்கம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
பணத்தாசை பிடித்த இளையராஜா! தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் நஷ்டஈடு கேட்பது இளையராஜாவின் வழக்கம். இது…
மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் விளாங்குடி பகுதிசெயலாளர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நீர்-மோர் பந்தல்…
This website uses cookies.