காரில் வலம் வரும் கஞ்சா வியாபாரி : செல்போன் மூலம் இளைஞர்களுக்கு விற்பனை.. தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதை தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது கதிர்வேல் நகர் பகுதியில் காரில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கதிர்வேல் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
மணிகண்டன் செல்போன் மூலம் கஞ்சா வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு காரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது
இதைத் தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் மணிகண்டனிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்திய ஆறு செல்போன்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர் மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 8000 பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
மேலும் இவரது செல்போன் மூலம் கஞ்சா விற்பனை எவ்வாறு செய்து வருகிறார் வெளி மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா கும்பலுடன் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
This website uses cookies.