கோவை வடவள்ளி பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் தோறும் காவல்துறையினர் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா வைத்திருக்கும் நபர்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் வடவள்ளி பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் வடவள்ளி அஜ்ஜனூர் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்ட போது நான்கு பேர் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 8.500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நால்வரில் மூன்று பேர் தேனி மாவட்டத்தை சேர்ந்த, மனோஜ் குமார்(33), மார்கண்டன்(33), தினேஷ்(27) மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்(31) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டாலோ பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் whatsapp எண் 7708100100 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.