கன்னியாகுமரி : நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டீக்கடை ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டீக்கடை ஒன்றில் கடந்த 17ஆம் தேதி அன்று காலை வடை போட்டு கொண்டு இருக்கும்போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது.
இதில் எட்டு பேர் படுகாயம் அடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிற்ச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த காட்சியில், கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீப்பழம்புகள் சிதறி வெளியே வந்த போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிய காட்சியும் ஒரு சிலருக்கு ஆடைகளில் தீ பற்றிய காட்சியும் அதில் உள்ளது.
மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஏற்கனவே நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவர்களில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.