வீட்டில் கேஸ் சிலிண்டர் தீர்ந்து போன நிலையில் பக்கத்து வீட்டில் வாங்கிய சிலிண்டர் பற்ற வைத்த போது உடனே வெடித்ததில் பெண் பலி ஒருவர் படுகாயம்
சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகர், 5வது விரிவு தெரு முதல் மாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்த லின்சி பிளஸினா(26) நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவரது வீட்டில் சமையல் கேஸ் தீர்ந்து விட்டதால் கடந்த 7ம் தேதி இரவு தாம்பரம் அருகே கௌரிவாக்கத்தில் வசிக்கும் அவருடன் வேலை பார்க்கும் மணிகண்டன்(30) என்பவரிடம் சிலிண்டர் கேட்டதின்பேரில் மணிகண்டன் அவரது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை கொண்டு வந்து லின்சி வீட்டில் பொருத்தி ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மளமளவென தீ பரவியதில் லின்சியின் 2 கைகள், மார்பு, கால் தொடை என் பல பகுதிகளிலும் தீக்காயமும் மணிகண்டனுக்கு இரு கைகள் பின்பக்க முதுகு என 45% தீ காயம் ஏற்பட்டது.
இருவரும் அலறி துடித்த அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லின்சி பிளசினா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.