கடலூர் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: ரிதன்யா பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்? குற்றவாளிகள் தப்ப முடியாது.. வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!
இந்த சம்பவத்திற்கு காரணம், ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாதான் என கூறி பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து அவரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் ரயில் மோத காரணம் வேன் ஓட்டுநர் தான், அவர் தான் கேட்டை திறக்க கேட் கீப்பரிடம் கூறியுள்ளார் என தெற்கு ரயில்வே விளக்கமளித்தது. ஆனால் நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை என வேன் ஓட்டுநர் மறுத்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு கேட் கீப்பர் பங்கஜ் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ரயில் வரும் போது தூங்கி கொண்டிருந்ததாக அவரே ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரயில் வருவதை அறிந்து ஸ்டேஷன் மாஸ்டர் தொலைபேசியல் அழைத்த நிலையில், பங்கஜ் போனை எடுக்காமல் தூங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏற்கனவே 5 முறை கேட் கீப்பர் இது போன்று ரயில் வரும் போது தூங்கி உள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.