வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 49 மற்றும் 43 வயது சகோதரர்கள். இவர்கள் வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்து கொண்டனர். அண்ணன், தம்பி தம்பதியினருக்கு தலா 2 மகன்கள் உள்ளனர்.
சகோதரர்கள் கடந்த 2018-ம் ஆண்டு குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் தங்கியிருந்து வேலை செய்தனர். அந்த சமயத்தில் சகோதரர்கள் தங்களின் 12, 7 மற்றும் 6 வயது மகன்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனை அறிந்த சிறுவர்களின் தாயார் உடனடியாக அவர்களை அழைத்து கொண்டு இந்தியாவிற்கு திரும்பினர்.
இதையும் படியுங்க: குளிப்பதை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர்.. பாஜக பிரமுகர் சிக்கியது எப்படி?
இந்த நிலையில் சில மாதங்களுக்கு பின்னர் இந்தியாவிற்கு வந்த சிறுவர்களின் 2 தந்தையும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு சிறுவர்களின் மற்றொரு சித்தப்பா மற்றும் பாட்டியும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து சிறுவர்களின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் நீதிபதி சிவக்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் முதல் மற்றும் 2-வது குற்றவாளிகளான அண்ணன், தம்பிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும், 3 மற்றும் 4-வது குற்றவாளியான சித்தப்பா, பாட்டிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அண்ணன், தம்பி இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.