விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடையும் நிலையில் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாத்தனூர் கிராமத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அலுவலர் வட்டாட்சியர் ரகுராமன் தலைமையிலான பறக்கும் படையினர் வி.சாத்தனூர் கிராம பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை செய்தனர்.
அப்பொழுது கோதண்டபாணி மகன் முத்து வயது 51 என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் அங்கு 400-க்கும் மேற்பட்ட எவர்சில்வர் பத்திரங்கள் இருந்தது தெரியவந்தது, இதையடுத்து அந்த பறிமுதல் செய்த அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பொருட்களை ஒப்படைத்தனர்.
மேலும் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள் விநியோகம் செய்தது அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.