விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடையும் நிலையில் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாத்தனூர் கிராமத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அலுவலர் வட்டாட்சியர் ரகுராமன் தலைமையிலான பறக்கும் படையினர் வி.சாத்தனூர் கிராம பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை செய்தனர்.
அப்பொழுது கோதண்டபாணி மகன் முத்து வயது 51 என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் அங்கு 400-க்கும் மேற்பட்ட எவர்சில்வர் பத்திரங்கள் இருந்தது தெரியவந்தது, இதையடுத்து அந்த பறிமுதல் செய்த அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பொருட்களை ஒப்படைத்தனர்.
மேலும் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள் விநியோகம் செய்தது அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.