ம.பியில் ஆம்புலன்சில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மெளகஞ்ச்: மத்திய பிரதேச மாநிலம், மௌகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று, அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உடன் ஆம்புலன்சில் பயணித்து உள்ளனர். அந்த ஆம்புலன்சில், இவர்கள் மட்டுமல்லாது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரும் இருந்துள்ளனர்.
முக்கியமாக, இவர்களில் யாரும் நோயாளிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆம்புலன்சை நிறுத்தி, சிறுமியின் சகோதரியும், அவரது கணவரும் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் எனக் கூறிவிட்டு இறங்கி உள்ளனர். ஆனால், தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்ற இருவரும் வருவதற்குள் ஆம்புலன்ஸ் அந்த சிறுமியோடுப் புறப்பட்டு உள்ளது.
இதன் பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுரின் கூட்டாளியான ராஜேஷ் கேவாட் என்பவர் ஆம்புலன்சில் வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து, அன்று இரவு முதல் சிறுமியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மறுநாள் காலையில் வேறு ஒரு இடத்தில் சாலையோரத்தில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் மிகவும் சோர்வான நிலையில் வீட்டுக்கு வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரேந்திர சதுர்வேதி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த ராஜேஷ் கேவாட் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: படுக்கை வரை வந்த முகநூல் நண்பர்.. குளிக்கச் சென்ற நேரத்தில் செய்த காரியம்!
மேலும், தலைமறைவாக உள்ள சிறுமியின் சகோதரி மற்றும் அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக, இந்தச் சம்பவம் நடைபெற்ற அதே பகுதியில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தேனிலவுக்குச் சென்ற தம்பதியில், புதுமணப் பெண்ணைக் கடத்திச் சென்று, 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.