தமிழகம்

ஆம்புலன்சில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சகோதரி செய்யக் கூடாத செயல்!

ம.பியில் ஆம்புலன்சில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மெளகஞ்ச்: மத்திய பிரதேச மாநிலம், மௌகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று, அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உடன் ஆம்புலன்சில் பயணித்து உள்ளனர். அந்த ஆம்புலன்சில், இவர்கள் மட்டுமல்லாது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரும் இருந்துள்ளனர்.

முக்கியமாக, இவர்களில் யாரும் நோயாளிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆம்புலன்சை நிறுத்தி, சிறுமியின் சகோதரியும், அவரது கணவரும் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் எனக் கூறிவிட்டு இறங்கி உள்ளனர். ஆனால், தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்ற இருவரும் வருவதற்குள் ஆம்புலன்ஸ் அந்த சிறுமியோடுப் புறப்பட்டு உள்ளது.

இதன் பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுரின் கூட்டாளியான ராஜேஷ் கேவாட் என்பவர் ஆம்புலன்சில் வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து, அன்று இரவு முதல் சிறுமியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மறுநாள் காலையில் வேறு ஒரு இடத்தில் சாலையோரத்தில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் மிகவும் சோர்வான நிலையில் வீட்டுக்கு வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரேந்திர சதுர்வேதி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த ராஜேஷ் கேவாட் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: படுக்கை வரை வந்த முகநூல் நண்பர்.. குளிக்கச் சென்ற நேரத்தில் செய்த காரியம்!

மேலும், தலைமறைவாக உள்ள சிறுமியின் சகோதரி மற்றும் அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக, இந்தச் சம்பவம் நடைபெற்ற அதே பகுதியில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தேனிலவுக்குச் சென்ற தம்பதியில், புதுமணப் பெண்ணைக் கடத்திச் சென்று, 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.