15 வயது சிறுமி கர்ப்பத்திற்கு காரணம் என 75 வயது முதியவரை தவறாக கைது செய்து சிறையில் அடைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.
கேரளா ஆலப்புழாவில் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர், தனது 15 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அந்த மாணவி படித்த பள்ளியில் 75 வயதான காவலாளி பணியாற்றி வந்தார்.
மேலும் இவர்கள் குடும்பத்துக்கு அந்த முதியவர் உதவியாக இருந்து வந்ததும், நெருங்கிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது
ஒரு நாள் பள்ளிக்கு வந்த மாணவி சோர்வாக இருப்பதை கவனித்த சக மாணவிகள், என்ன பிரச்சனை என கேட்ட போது, பள்ளி காவலாளியால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவிகள், பள்ளி நிர்வாகத்திற்கு கூறியுள்ளனர். அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், மாணவி பேச்சை கேட்டு முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் இந்த வழக்கு செங்கன்னூர் நீதிமன்றத்தில் நடந்த போது, நீதிபதி மாணவியிடம் கேள்வி எழுப்பினர். அபபோது அவர், தனது காதலனை காப்பாற்ற காவலாளி மீது பொய் புகார் அளித்தாக கூறியதை கேட்டு ஷாக் அடைந்த நீதிபதி, உடனே காதலனை கைது செய்ய சொல்லி உத்தவிட்டார்.
மேலும் உரியமுறையில் விசாரணை நடத்ததாத போலீசாரை கண்டித்த நீதிபதி, முதியவரை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.