மதுரையில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெரு பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி மகன் சரவணன் குமார். இவரது மகள் நிர்மலா மேல்நிலைபள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்த நிலையில் இதே தெருவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மருதுபாண்டி என்பவரது மகன் மணிரத்னம் சரவணக்குமார் மகளை காதலித்தாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அடிதடி பிரச்சினையில் ஜெயிலுக்கு சென்றார்.
மணிரத்னம் மீது காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவ அவர், சிறுமியிடம் காதலிக்க வற்புறுத்தியுள்ளார்.
சிறுமி மறுக்கவே மணிரத்னம் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து நேற்று மாலை பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பற்ற வைத்து வீசி விட்டு தப்பி விட்டார். இதில் வீட்டின் முன்புறம் சேதமாகின.
உடனே வந்த சரவணகுமார் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெருக்கமான குடியிருப்புகள் அமைந்த பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.