தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியானது வனப்பகுதியை ஒட்டிய பகுதியாகும்,இந்த பகுதியில் ஒரு மர்ம கும்பல் இரவு நேரத்தில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ,தர்மபுரி ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர், திடீரென அப்பகுதியில் இரவு நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது,மகேந்திரமங்கலம் காவல் நிலையம் அருகில் சீங்கேரி கூட்ரோட்டில் உள்ள கார்த்தி என்பவரது (ஓட்டல்+வீடு) வீட்டில், 2 கர்பிணி பெண்களிடம் தலா ரூ.20,000 பணம் வசூல் செய்து, சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பலை சேர்ந்த இடைத்தரகர் வடிவேல், ஸ்கேன் செய்யும் கற்பகம் என்பவரை, ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பிடித்தனர்.
மேலும் இடைத்தரகர்கள் திருமலை (40),ஜோதி (35) (பெண்) இருவரும் தப்பித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து பாலினம் கண்டறியும் இயந்திரம், பணம் ரூபாய் 18,000 பறிமுதல் செய்து, மகேந்திரமங்கலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இந்த கற்பகம் என்பவர் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணியாற்றி வந்து தொடர்ந்து இது போன்ற சட்டவிராத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு காரிமங்கலம் பகுதியில் கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.