தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியானது வனப்பகுதியை ஒட்டிய பகுதியாகும்,இந்த பகுதியில் ஒரு மர்ம கும்பல் இரவு நேரத்தில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ,தர்மபுரி ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர், திடீரென அப்பகுதியில் இரவு நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது,மகேந்திரமங்கலம் காவல் நிலையம் அருகில் சீங்கேரி கூட்ரோட்டில் உள்ள கார்த்தி என்பவரது (ஓட்டல்+வீடு) வீட்டில், 2 கர்பிணி பெண்களிடம் தலா ரூ.20,000 பணம் வசூல் செய்து, சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பலை சேர்ந்த இடைத்தரகர் வடிவேல், ஸ்கேன் செய்யும் கற்பகம் என்பவரை, ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பிடித்தனர்.
மேலும் இடைத்தரகர்கள் திருமலை (40),ஜோதி (35) (பெண்) இருவரும் தப்பித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து பாலினம் கண்டறியும் இயந்திரம், பணம் ரூபாய் 18,000 பறிமுதல் செய்து, மகேந்திரமங்கலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இந்த கற்பகம் என்பவர் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணியாற்றி வந்து தொடர்ந்து இது போன்ற சட்டவிராத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு காரிமங்கலம் பகுதியில் கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.