இறங்கி இறங்கி ஏறும் தங்கம் விலை : சவரனுக்கு ரூ.144 அதிகரிப்பு
18 September 2020, 11:07 amஇன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.
இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும் இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது
அந்த வகையில், கடந்த இரு தினங்களாக இறங்கி வந்த தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.39,496க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.18 உயர்ந்து ரூ.4,937-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.70,200 ஆக வர்த்தகமாகிறது.