கரூர் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என குளித்தலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். கரூரில் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டதற்கு பிறகு. இரண்டாவது நிலையில் உள்ள நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது விதி.
ஆனால் கலைஞரின் முதல் தொகுதியிலேயே இவ்வளவு பிரச்சினையா? என்பதைப் போல, தற்போது போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருப்பது வைரலாகி வருகிறது.
அதாவது, வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை எனப் புகார் அளித்து போலீஸ்காரர்களையே கதிகலங்கச் செய்திருப்பார்.
அதேபோல, ‘குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவனையை காணவில்லை என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஊர் முழுவதும் போஸ்டரை அடித்துள்ளனர்.
அந்த போஸ்டரில், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவனையை காணவில்லை என்றும், திருடி சென்றவர்களை கண்டுபிடித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, எங்கள் குளித்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை குளித்தலை மக்களிடம் ஒப்படைத்திடுக, எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.