கரூர் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என குளித்தலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். கரூரில் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டதற்கு பிறகு. இரண்டாவது நிலையில் உள்ள நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது விதி.
ஆனால் கலைஞரின் முதல் தொகுதியிலேயே இவ்வளவு பிரச்சினையா? என்பதைப் போல, தற்போது போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருப்பது வைரலாகி வருகிறது.
அதாவது, வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை எனப் புகார் அளித்து போலீஸ்காரர்களையே கதிகலங்கச் செய்திருப்பார்.
அதேபோல, ‘குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவனையை காணவில்லை என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஊர் முழுவதும் போஸ்டரை அடித்துள்ளனர்.
அந்த போஸ்டரில், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவனையை காணவில்லை என்றும், திருடி சென்றவர்களை கண்டுபிடித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, எங்கள் குளித்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை குளித்தலை மக்களிடம் ஒப்படைத்திடுக, எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.