நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 209 ரன்கள் எடுத்தது.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. தொடக்க வீரரான 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அபராமாக விளையாடினார்.
இதையும் படியுங்க: நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!
கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசி தள்ளினார். 38 பந்தில் 7 பவுண்டரி, 11 சிக்சர் விளாசிய அவர் 101 ரன்கள் எடுத்து அதிவேக சதம் அடித்த முதல் இந்தியராகவும், ஐபிஎல் போட்டியில் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்,
இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. சூர்யவன்ஷிக்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசை அறிவித்துள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், கடந்த ஆண்டு சூர்யவன்ஷி மற்றும் அவரது தந்தையை சந்தித்தேன். தற்போது இந்த சாதனை படைத்த அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை கூறினேன்
அவருக்கு ரூ.10 லட்சம் பரிசை இந்த அரசு வழங்கும். எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடி பல சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.