திருவள்ளூர் ; அரசுக்கு சொந்தமான மின் ஒயர்களை திருடிய திமுக இளைஞரணி அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதியில் அரசுக்கு சொந்தமான மின் ஒயர்கள் மாயமானதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வெங்கல் போலீசார் விசாரணை நடத்தியதில் திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் மின் ஒயர்களை திருடியது தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் 8 வருடமாக திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும், இதுவரையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்புள்ள மின் ஒயர்களை திருடியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. திருடப்பட்ட மின் ஒயர்களை அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் இருக்கும் பழைய இரும்பு கடைகளில் விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
அலெக்சாண்டர் மீது திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.