சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல்முறையாக கிராமத்திற்கு விடப்பட்ட அரசுப் பேருந்து, ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால், அதிருப்தியடைந்த மாணவ, மாணவிகள், ஆபத்தான முறையில் பால் வண்டியில் தொங்கிச் சென்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி பஞ்சாயத்திற்கு மாரியம்பட்டி கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார்சாலை வசதி இருந்தும் சுதந்திரம் பெற்றதில் இருந்து நேற்று வரை இந்த பகுதிக்கு பேருந்து வசதி இல்லாமல், கிராம மக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், மருந்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
பல ஆண்டுகளாக இக்கிராமத்திற்கு பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனார். இவர்கள் கோரிக்கைகள் தேர்தல் நேரங்களில் வாக்குறுதியாக மட்டும் ஏமாற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்த நிலையில்,
மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை ஏற்று, அரூரில் இருந்து அதிகாரப்பட்டி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் 12 ஏ என்னும் எண் கொண்ட அரசு பேருந்தை மாரியம்பட்டி கிராமம் வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, நேற்று காலை 8:30 மணி அளவில் இக்கிராமத்திற்கு அரசு பேருந்து வரும் என எதிர்பார்த்து பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், பேருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால், பள்ளி மாணவ, மாணவிகள் கடுப்பாகினர்.
மேலும், ‘உங்க பஸ்சும் வேணாம்.. பஸ்சுக்காக எவ்வளவு நேரம் காத்து கொண்டு இருக்கிறது,’ என எண்ணியபடி அவ்வழியாக வந்த தனியார் பால் வாகனத்தில் ஏறி ஆபத்தான வகையில் பயணம் செய்தவாறு பள்ளிக்கு சென்றனர்.
அதனை பிறகு வந்த அரசு பேருந்தை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கூச்சலிட்டு கைதட்டி நடனமாடி ஆரவாரம் செய்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனையடுத்து, பேருந்தை பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கலந்துகொண்டு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.