சூலூர் அருகே சாலையில் திரும்ப முயன்ற பள்ளி வேன் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளி பேருந்து 12 மாணவர்களுடன் திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது. கண்ணம்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு சூலூர் செல்வதற்காக ராவத்தூர் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அதிவேகமாக வந்த அரசு பேருந்து பள்ளி வேன் மீது மோதியது.
இதில் பள்ளி வேன் ஓட்டுநர் ராமராஜ், உதவியாளர் காந்திமதி உட்பட மாணவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினர். வேனில் பயணித்த கௌசிக் நிவாஸ் என்ற மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் கௌஷிக் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து காரணமாக திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, பள்ளி வேன் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.