Categories: தமிழகம்

தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசுப் பேருந்துகள் போட்டி… ஒன்றுடன் ஒன்று உரசி விபத்து : நூலிழையில் தப்பிய பயணிகள்!!

தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசுப் பேருந்துகள் போட்டி… ஒன்றுடன் ஒன்று உரசி விபத்து : நூலிழையில் தப்பிய பயணிகள்!!

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் இருந்து தண்ணீர் பந்தல் பாளையம் வழியாக கரூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல நகர பேருந்து ஒன்று, நகர எல்லைக்குள் வையாபுரிநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது சேலத்தில் இருந்து மதுரை செல்லும் நீண்ட தூர அரசு பேருந்து ஒன்று, அவ்வழியாக வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்து இயக்கி வந்த ஓட்டுநர் பொறுமையின்மை காரணமாக அதிவேகத்தில் நகரப் பேருந்தை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளார்.

அதனால் இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று உரசி நின்றன. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர். மேலும், விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநருடன், நகரப் பேருந்து ஓட்டுநர், பொதுமக்கள் மற்றும் பயணிகளும் வாக்குவாதம் செய்தனர்.

இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று உரசி ஏற்பட்ட விபத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் மாற்றி விடப்பட்டன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.