சேலம்: அரசு சொகுசு பேருந்து ஒன்று வாழப்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்த அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காலை 4 மணிக்கு வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட டிரைவர் முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்து அறிந்த வாழப்பாடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேருந்துக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாங்களுடன் 20 பேரும், லேசான காங்களுடனும் 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்தின் ர் சீனிவாசன் மற்றும் கண்டக்டர் செல்வராஜ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் சிசிக்சை பெற்று வருகின்றனர். விபத்தால் வாழப்பாடி சேலம்-சென்னை புறவழிச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.