கேரளா : பாலக்காட்டில் பைக்கை முந்த முயன்ற கேரள அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது உரசி வாகன ஓட்டியின் மீது சக்கரம் ஏறி இறங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து தாமரசேரி செல்லும் சாலை வழியாக கேரள அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு 8 மணி அளவில் விளையூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை கேரளா பேருந்து முந்த முயன்றுள்ளது. இதில் இடதுபுறம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கேரளா பேருந்து மோதி இரு சக்கர வாகன ஒட்டியின் மேல் பேருந்தின் பின் பக்க சக்கரம் ஏறி இறங்கியது.
இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கேரளா பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவாக முந்தி சென்றதால் தான் விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதில் விபத்துக்குள்ளான இரு சக்கர வாகன ஓட்டி மலப்புரம் கொளத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்துள்ளது .
இவர் தலையில் பலத்த காயத்துடன் பெரிந்தல்பண்ணா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது காயமடைந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பேருந்து உட்பட பேருந்தை ஓட்டிய ஓட்டுனர் மீதும் வழக்கு பதிவு செய்து பாலக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.