நன்னிலம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள், மாணவர்கள் அரசு பேருந்தை வழிமறைத்து பேருந்து ஓட்டுநர், நடத்துனரை தாக்க முற்பட்ட காட்சி வைரல்…
திருவாரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணியாக இருந்து வரும் கஞ்சா, குட்கா முதலான போதைப்பொருட்கள் காவல்துறை துணையுடன் பெட்டி கடைகளிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் இருந்து ஏரவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்து அதம்பார் என்ற இடத்தில் குறுகிய சாலை வழியாக சென்றபோது, பின்புறமாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பேருந்தினை இடைமறைத்து இருசக்கர வாகனத்திற்கு வழிவிட மாட்டாயா என பேருந்தில் ஏறி பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பேருந்தை கொளுத்திவிடுவோம் என பேருந்து நடத்தினரிடம் சவால் விட்டு ரகளையில் ஈடுபட்டனர். அரசு பேருந்து ஓட்டுநரை தாக்க இளைஞர் முற்படும் காட்சி மற்றும் பேருந்தை கொளுத்திவிடுவோம் என ஆவேசத்துடன் ரகளையில் ஈடுபடும் காட்சியினை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டிருப்பது தற்போது வைரலாக மாறியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.