கொடைக்கானலில் அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளி மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட சைக்கிள்களை பழைய இரும்பு கடைக்கு போடப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் மாணவிகளுக்கு வழங்கிய சைக்கிள்களை கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி ஒன்று பழைய இரும்பு கடைக்கு போடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சைக்கிள்களில் தமிழக அரசு முத்திரை மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயலலிதா அவர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளது.
மேலும், இந்த பிரச்சனை குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்ட போது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.