கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை உதவி அலுவலராக பணியாற்றிவந்த கருப்புசாமி என்ற அரசு ஊழியர், இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இதையும் படியுங்க: தொண்டர்களை சந்திக்காமல் நடிகையை சந்தித்த விஜய் ஒரு தலைவரா? திமுக பேச்சாளர் தரக்குறைவான விமர்சனம்!
இந்நிலையில் நேற்று இரவு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பின் 5 வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர் மது அருந்திய நிலையில் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது, அதேபோல தொடர்ந்து மது குடித்து வந்ததால் குடும்பத்தில் சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது.
தற்பொழுது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.இந்த சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மது போதையில் தடுமாறி கீழே விழுந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.