Categories: தமிழகம்

உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு அரசு மரியாதை : இறுதிச்சடங்கு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு அரசு மரியாதை : இறுதிச்சடங்கு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக வடிவேலு (43) பணியாற்றி வந்தார். கடந்த 23ஆம் தேதி பணி முடித்துவிட்டு தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் தேதி மூளை சாவு அடைந்து வடிவேலு உயிரிழந்தார். உயிரிழந்த வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவர்கள் குடும்பத்தார்கள் முடிவு செய்து தானம் செய்யப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இன்று தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காந்தி காலனியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த வடிவேலின் உடலுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்,
வடிவேலின் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு அவர்கள் குடும்பத்தார்கள் சம்மதம் தெரிவித்தனன் பேரில் அவரது உடலில் சிறுநீரகம், கல்லீரல், கண் விழி, தோல் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள் மதுரை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் வேண்டி காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் இன்று வடிவேலு உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் குடையாக வழங்கப்படுபவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்தார்

மேலும் உயிரிழந்த வடிவேலின் தந்தை கடந்த 25 ஆண்டுகளாக கண் பார்வை இழந்து இருக்கும் நிலையில் அவரை சென்னை கண் மண்டல மருத்துவமனையில் அவருக்கு ஆய்வு செய்து கண் பார்வை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருந்தால் அவருக்கு தேவையான உதவி அரசு செய்யும் என அமைச்சர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 hour ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

3 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

3 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

4 hours ago

This website uses cookies.