Categories: தமிழகம்

உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு அரசு மரியாதை : இறுதிச்சடங்கு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு அரசு மரியாதை : இறுதிச்சடங்கு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக வடிவேலு (43) பணியாற்றி வந்தார். கடந்த 23ஆம் தேதி பணி முடித்துவிட்டு தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் தேதி மூளை சாவு அடைந்து வடிவேலு உயிரிழந்தார். உயிரிழந்த வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவர்கள் குடும்பத்தார்கள் முடிவு செய்து தானம் செய்யப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இன்று தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காந்தி காலனியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த வடிவேலின் உடலுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்,
வடிவேலின் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு அவர்கள் குடும்பத்தார்கள் சம்மதம் தெரிவித்தனன் பேரில் அவரது உடலில் சிறுநீரகம், கல்லீரல், கண் விழி, தோல் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள் மதுரை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் வேண்டி காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் இன்று வடிவேலு உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் குடையாக வழங்கப்படுபவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்தார்

மேலும் உயிரிழந்த வடிவேலின் தந்தை கடந்த 25 ஆண்டுகளாக கண் பார்வை இழந்து இருக்கும் நிலையில் அவரை சென்னை கண் மண்டல மருத்துவமனையில் அவருக்கு ஆய்வு செய்து கண் பார்வை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருந்தால் அவருக்கு தேவையான உதவி அரசு செய்யும் என அமைச்சர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

14 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

16 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

16 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

17 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

17 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

18 hours ago

This website uses cookies.