Categories: தமிழகம்

மண்ணை தின்று உயிர் வாழும் மூதாட்டி: சொத்தும், பென்சன் பணம் போதும்…அம்மா வேண்டாமென கைகழுவிய அரசு அதிகாரி மகன்கள்..!!

தஞ்சை: அரசு வேலையில் இருக்கும் இரண்டு மகன்கள் கைவிட்டதால், மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டியை பூட்டை உடைத்து காவல்துறையினர் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே காவிரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், எலும்பும் தோலுமாக ஆடையின்றி ஒரு மூதாட்டி மண்ணை உண்பது போல் காட்சிகள் சமூகவளைதலங்களில் வேகமாக பரவியது. மேலும் இந்த காட்சி குறித்து 1098 உதவி மையத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த சமூக நலத்துறையினர், அப்பகுதியில் விசாரித்த போது, அந்த மூதாட்டி பெயர் ஞானஜோதி (62) என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், திருமணமாகி அவருக்கு மூன்று குழந்தைகள் என தெரியவந்துள்ளது. மூத்தமகன் சென்னையில் காவல் ஆய்வாளராகவும், இளைய மகன் பொதிகை தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில் கணவரும், தனது மகளும் கடந்த சில 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஞானஜோதியை இரண்டு மகன்களும் கவனிக்காமல் கைவிட்டுள்ளனர். சொத்து பிரச்சினை காரணமாக தனியே வசிக்கும் மகன்கள், மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர்.

இது குறித்து அருகில் இருப்பவர்கள் கூறுகையில், கடந்த 10 வருடமாக மூதாட்டியின் நிலை இப்படி தான் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை அவரது மகன்கள் வந்து பிஸ்கட் வாங்கி கேட் வழியாக தூக்கி வீசி விட்டு போவார்கள். இது குறித்து கேட்டால் எங்களிடம் சண்டைக்கு வருவார்கள் என தெரிவிக்கின்றனர். இப்பகுதி மக்கள் அவ்போது உணவு வழங்கி வந்துள்ளனர்.

தண்ணீர், உணவு என எதுவும் இல்லாமல் மண்ணை உண்டும் வந்துள்ளார் மூதாட்டி. இந்த காட்சிகள் சமூக வளைதலத்தில் பரவியதையடுத்து உடனடியாக அந்த மூதாட்டியை மீட்டு முதலுதவி வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் அந்த இரண்டு மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து காவல்துறை உதவியுடன் வந்த சமூக நலத்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டியை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு வந்த மூத்த மகன் சொத்தையும், பென்சன் பணம் 30,000 ரூபாயும் தம்பி எடுத்து கொண்டதாகவும் வேதனை தெரிவித்தாரே தவிர தனது தாயை பற்றி அவர் கொஞ்சம் கவலைப்படவில்லை என்பது வேதனையின் உச்சம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

10 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

12 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

12 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

13 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

13 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

14 hours ago

This website uses cookies.