2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. கூட்டம்தொடங்கும் முன்பே அதிமுகவினர் அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து தங்களது சட்டையில் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர்.
இதனால் கூட்டம் தொடங்கும் முன்பே பரபரப்பை தொற்றியது. பின்னர் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்என் ரவி பேரவைக்கு வருகை தந்தார்.
அவரை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். பின்னர் கூட்டம் தொடங்கிய 3 நிமிடங்களில் ஆளுநர் ஆர்என் ரவி உரையை புறக்கணித்து பேரவை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.அரசியலமைப்பு சட்டமும், தேசிய கீதமும், தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது.
தான் அவைக்கு வந்த போது, தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே படப்பட்டது. தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியபோது அவர் அதனை ஏற்க மறுத்ததாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த சில நிமிடங்களில் அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பதிவேற்றப்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.