Categories: தமிழகம்

மாணவர்களிடம் மனஉளைச்சலை ஏற்படுத்தும் அரசு உதவி பெறும் பள்ளி : மதிப்பெண் கேட்டு பள்ளிக்குள் அனுமதிக்கும் காவலாளி!!

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சரவணவேலு மற்றும் சாதனாதேவி இருவரும் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சாதனாதேவி பத்தாம் வகுப்பு அவினாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளியிலும், அதேபோல அவரது மகன் சரவண வேலு ராமலிங்க செட்டியார் பள்ளியில் படித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனா தேவி 260 மதிப்பெண்களும் சரவண வேலு 269 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் ராமநகர் பகுதியில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க மகனையும் மகளையும் அழைத்து வினோத் வந்துள்ளார்.

ஆனால் பள்ளியின் தரப்பில் தங்களது பள்ளியில் படித்த மாணவர்களை சேர்த்த பிறகு வேறு பள்ளியில் படித்தவர்களை சேர்க்க உள்ளதாகவும், இரண்டு நாட்கள் கழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று பள்ளியின் காவலாளி , பள்ளியில் +1 சேர வரும் மாணவர்களை மதிப்பெண்களை கேட்ட பிறகே உள்ளே அனுமதித்துள்ளார்.

மதிப்பெண் குறைவாக இருந்தால் வெள்ளிகிழமை வருமாறு கூறியதால், பள்ளியில் சேர வந்த மாணவர்களும் பெற்றோரும் வேதனையுடன் திரும்பினர்.

மாணவர்களுக்கு மன அழுத்தை கொடுத்து விடக்கூடாது என கருதி அரசு முதல் மதிப்பெண்கள் அறிவிப்பை ரத்து செய்து வரும் நிலையில், பள்ளியில் சேர வந்தவர்களிடம் காவலாளியே மதிப்பெண் தெரிந்தால் தான் உள்ளே அனுமதிப்பதாக கூறுவது மாணவர்களிடையே நெருடலை உருவாக்கியுள்ளது.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா கூறும்போது தங்களது பள்ளியில் 191 பேர் பிளஸ் ஒன் படிக்க உள்ளனர் ஆகையால் முதலில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும், தங்களது பள்ளியின் படித்த மாணவர்களின் சேர்க்கை முடிந்த பிறகு இரண்டு நாட்களுக்கு பிறகு மற்றவர்கள் சேர்க்கபடுவார்கள் என விளக்கம் அளித்தார்.

உயர்நிலை பள்ளியில் படித்த மாணவர்கள் மேல் நிலை பள்ளியில் சேர்வதற்காக செல்லும் போது, இதுபோன்ற சங்கடத்தை சந்திக்கின்றனர்
என்பது குறிப்பிட்டத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.