கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் இருந்து டவுன்ஹால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது.
முருகவேல் என்ற ஓட்டுநர் இப்பேருந்தை ஓட்டி வந்து உள்ளார். இந்நிலையில் வேடப்பட்டி அருகே எதிர் திசையில் மாதம்பட்டி நோக்கி அதி வேகமாக வந்து கொண்டு இருந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தின் போது அவ்வழியே சென்ற பழ வியாபாரி சுப்பிரமணி என்பவர் மீதும் பேருந்து மோதி சுப்பிரமணி காயம் அடைந்தார். இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த தேனமநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபிசங்கர் என்பவர் படுகாயம் அடைந்தார்.
இதை அடுத்து அப்பகுதி மக்கள் கோபி சங்கர் மற்றும் பழ வியாபாரி சுப்பிரமணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே விபத்து சம்பவம் தொடர்பான அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.