Categories: தமிழகம்

பெண் காவலர் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து… போக்குவரத்து விதியை மீறியதால் விபத்து.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவார் சாந்தி. இவர் குமரன் ரோட்டிலிருந்து வடக்கு காவல் நிலையம் நோக்கி ஒரு வழிப்பாதையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார்.

திடீரென அவர் அந்த ரோட்டில் யூ டர்ன் போடுவதற்காக போக்குவரத்து விதியை மீறியபடி தனது ஸ்கூட்டரை திருப்ப முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது ஸகூட்டர் மோதியதில் தட்டு தடுமாறி போலீஸ் சாந்தி ரோட்டில் விழுந்தார்.

போக்குவரத்து நிறைந்த சாலையான குமரன் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் நடுரோட்டில் விழுந்து கிடந்த சாந்தியின் மீது அந்தவழியாக வந்த அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், சாந்தியின் வலது கையில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அவசரத்திற்கு அருகில் இருந்த போலீஸ் வாகனத்தில் சாந்தியை ஏற்றிய போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளிக்கப்பட்டு அவர் தற்போது கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஓட்டுனர் பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த போது பதிவான சிசிடிவி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

25 minutes ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

48 minutes ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

2 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

3 hours ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

5 hours ago

This website uses cookies.