செங்கோட்டையிலிருந்து திருப்பூர் நோக்கி 57 பயணிகளுடன் வந்த அரசு பேருந்தை ஓட்டுநர் சரவணன் (வயது 42) என்பவர் இயக்கி வந்தார்.
இந்த பேருந்து திருப்பூர் அருகே கோவில்வழி புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது வலதுபுற சாலையில் இருந்து பொக்லின் வாகனம் ஒன்று திடிரென வந்துள்ளது.
பேருந்தை பொக்லின் மீது மோதாமல் தவிர்க்க ஓட்டுநர் சரவணன் இடது புறம் திருப்பி உள்ளார். இதில் சாலையோரம் இருந்த கடைக்குள் பேருந்து நுழைந்தது.
கடையின் முன்பு யாரும் இல்லாததாலும், பேருந்து மெதுவாக இயக்கப்பட்டதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணித்த 57 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற நல்லூர் போலீசார் பணிகளை மீட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
This website uses cookies.