Categories: தமிழகம்

திமுக எம்எல்ஏவின் தனியார் பேருந்தில் அரசு பேருந்து டிக்கெட்.. வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி..!!

திமுக எம்எல்ஏவின் தனியார் பேருந்தில் அரசு பேருந்து டிக்கெட்.. வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த கதிரவன் என்பவர் உள்ளார். இவருக்கு சொந்தமாக தனலட்சுமி சீனிவாசன் ட்ரான்ஸ்போர்ட் என்ற பஸ் துறையூர் முதல் பெரம்பலூர் இயங்கி வருகிறது.

இந்த பஸ்ஸில் பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் நக்க சேலத்தில் இருந்து பெரம்பலூருக்கு பயணம் செய்தார் . அப்போது அவர் 17 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். அப்போது டிக்கெட்டின் ஒரு பக்கத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் என்றும் மற்றொரு பக்கத்தில் தனலட்சுமி சீனிவாசன் ட்ரான்ஸ்போர்ட் என்றும் அந்த டிக்கெட்டில் நாள் பயண தேதி உள்ளிட்டவை அச்சிடப்பட்டுள்ளது.

அதிர்ச்சி அடைந்த அவர் சக பயணிகளிடம் கேட்டபோது அனைவருக்குமே இதே போல் தான் டிக்கெட் விநியோகித்து உள்ளனர். அதிர்ச்சி அடைந்த ராமர் டிக்கெட்டின் இரண்டு பக்கத்தையும் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகி ஒருவரிடம் விசாரித்த போது அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் பனிமனையில் பணிபுரியும் கண்டக்டர் அல்லது பணியாளர் யாரோ ஒருவர் குறைந்த விலைக்கு டிக்கெட் ரோலையோ அல்லது ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால் அரசு போக்குவரத்துக் கழகத்தில் இலவசமாக வாங்கி இருக்கலாமோ என்ற என்றும் கூறுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.