சேலம் அரசுப் பள்ளி ஒன்றில் குடிபோதையில் வந்த ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்: சேலம் மாவட்டத்தில் இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், இங்கு பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று உள்ளது. அப்போது தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரன், மது போதையில் சிறப்பு வகுப்புக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. அதோடு, அவர் ஒரு மாணவியிடம் ஆபாசமாகப் பேசியது மட்டுமல்லாமல், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு உள்ளார்.
பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவி, இது குறித்து பெற்றோரிடம் கூறி அழது உள்ளார். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரகதீஸ்வரனை கைது செய்து உள்ளனர்.
இதையும் படிங்க: 2 attempt தோல்வி.. 3வது முயற்சியில் காதல் கணவனைக் கொன்ற மனைவி!
தொடர்ந்து, நேற்று தற்காலிக ஆசிரியர் பிரகதீஸ்வரன் பணி நீக்கமும் செய்யப்பட்டு உள்ளார். மேலும், இது தொடர்பான அறிக்கை மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அரசுப் பள்ளியில் மதுபோதையில் வந்த ஆசிரியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.