பழனி அரசு பள்ளி மாணவிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் சம்பவத்தை படம் பிடித்த செய்தியாளர்களை படம் பிடிக்க கூடாது எனக்கூறி பழனி காவல்துறை டிஎஸ்பி சிவசக்தி தாக்க முயன்றதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சத்யா நகரில் அரசு ஆதிதிராவிட நலத்துறை மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக எழுந்த பிரச்சினையில் அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விடுதி கண்காணிப்பாளர் அமுதா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அமுதாவையே மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனக்கோரி இன்று விடுதி மாணவிகள் பதாகைகளை ஏந்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் இந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிகளின் சாலை மறியல் போராட்டத்தை செய்தியாளர்கள் படம் பிடித்தனர்.
அப்போது ஆவேசம் அடைந்த பழைய டிஎஸ்பி சிவசக்தி படம் பிடிக்கக் கூடாது எனக் கூறி செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ஆவேசமடைந்த டிஎஸ்பி சிவசக்தி அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளரை தாக்க முயன்றார்.
இதனால் அங்கு கடும் பத்திரிக்கையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்ற போலீசார் டிஎஸ்பியை சமாதானம் செய்தனர்.
அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய டிஎஸ்பி, போராட்டத்தை செய்தியாக வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.