மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ முருகானந்தம். இவரது மகள் லாவண்யா 23. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் லாவண்யாவின் தாத்தா பிரமியப்பன் மதுரையில் காலமானார்.
தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மதுரை அண்ணாநகரை சேர்ந்த நண்பர் யுவராஜ் 24, உடன் டூவீலரில் நேற்று வந்தார்.
அதிகாலை 5:00 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி அருகே எரமநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. இதில் லாவண்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.நேற்று மாலை தத்தனேரி மயானத்தில் தாத்தா, பேத்தி இருவர் உடலும் தகனம் செய்யப்பட்டது.
தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த பேத்தியும் சாலை விபத்தில் பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.