அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அக்கட்சி தலைமை அறிவித்தது.
இதனையடுத்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈபிஎஸ் முகாமிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அணியையும் அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளையும் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் கட்சி கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த அதிகாரம் இல்லை அவ்வாறு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.
அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் இணைந்து மாவட்டச் செயலாளர் குன்னம் ராமசந்திரனிடம் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.
அவர் மறுத்த நிலையில் அவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்தனர். இதனால் அனைவரையும் நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.