அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிரீன் சிக்னல்.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 19ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதிமுக சார்பில் வழங்க உள்ளதாகவும் இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்க மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து அதிமுக ஆர்.கே.நகர் நிர்வாகி நித்தியானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
அதில் ஒவ்வொரு ஆண்டும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு காவல்துறை மறுத்துவிட்டனர். இதனால் திலகர் நகர் பகுதியில் நடந்த அனுமதி கேட்கப்பட்டது அதற்கும் காவல்துறை மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் இது போன்ற நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி இந்த இரண்டு இடங்களிலும் இல்லாமல் தண்டையார் பேட்டையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.