Categories: தமிழகம்

காஞ்சியில் பிரபல ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்த ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு : குளங்களையும் மீட்ட அரசு அதிகாரிகள்!!

பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார்

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக வலைய தலங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நீர்வடி கால்வாயில் 5 ஏக்கர் நிலத்தை சுமார் 12 ஆண்டுகளாக ரவுடி குணா ஆக்கிரமித்திருந்தார்.

மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் அந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.

இந்த இடத்தின் தற்போதைய சந்தை விலை சுமார் 15 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், வழிப்பறி என 42 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

31 minutes ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

33 minutes ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

1 hour ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

2 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

3 hours ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

3 hours ago

This website uses cookies.